நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளதாக கடந்த ஜனவரி மாதம் தகவல் வெளியானது. அதன்படி, ‘சிவகங்கை’ என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் நாகை-இலங்கை இடையே கடல் பயணத்தை தொடங்க உள்ளது. இந்த கப்பல் இன்று (மே 13) முதல் இயக்கப்படவுள்ளது

. சென்னையில் இருந்து இந்த கப்பல் நேற்று (மே 12) மதியம் நாகை வந்தடைந்துள்ளது. சோதனை ஓட்டத்திற்குப் பிறகு இலங்கை காங்கேசன் துறைக்கு கப்பல் போக்குவரத்து சேவை தொடங்க உள்ளது.