தமிழகத்தில் நேற்று சிவக்குமார் கல்வி அறக்கட்டளை சார்பில் பெற்றோரை இழந்த 12ஆம் வகுப்பு மாணவர்களின் மேல்படிப்புக்கு  கல்வி உதவி தொகையை நடிகர் சூர்யா  வழங்கினார். இதற்கான விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் சூர்யா, சிவக்குமார், கார்த்தி என பலரும் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய சிவக்குமார், தன்னுடைய பள்ளிக் கால வாழ்க்கை குறித்து பேசினார்.

அவர் பேசும் போது, சிறு வயதில் நல்ல உணவு சாப்பிட்டதில்லை, உடுத்திக்கொள்ள நல்ல உடை இல்லை என்றார். மேலும் தன்னை படிக்க வைக்க தன் தாய் பட்ட கஷ்டத்தை சொல்லி மேடையில் கண் கலங்கினார். தந்தை பேசியதை கேட்டு சூர்யாவும் கண் கலங்கினார்.