சமூக வலைதளங்களில் ஒரு திகிலூட்டும் திருட்டு வீடியோ வைரலாகி வருகிறது. சூப்பர் மார்க்கெட்டில் ஒரு நபர் பழங்களை எடுப்பது போல் நடித்து, அவற்றை சாமர்த்தியமாகத் திருடுகிறார். அவர் பழங்களை ஒரு பாலிதீன் பையில் வைப்பது போலக் காட்டிக்கொண்டு, உண்மையில் அதன் கீழே மறைத்து வைத்திருந்த ட்ராலி பைக்குள் போட்டுத் திரடுகிறார். நேரில் பார்ப்பவர்களுக்கு இது தெரியவில்லை.

​அவர் மிகவும் கில்லாடியாகச் செய்யும் இந்தத் திருட்டு, சிசிடிவி கேமராவில் பதிவானதால் வெளிவந்துள்ளது. இந்த வீடியோவைப் பகிர்ந்த நெட்டிசன்கள், அவரை ஒரு ‘மாயாஜாலக்காரர்’ என்று கிண்டல் செய்துள்ளனர். “இவ்வளவு சாமர்த்தியமான திருடர்களிடம் இருந்து கடைகளைப் பாதுகாப்பது கடினம்” என்றும் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.