தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் சமீபத்திய ஒரு பேட்டியில் “புஷ்பா” திரைப்படத்தில் நடித்த ராஷ்மிகாவை பற்றி விமர்சித்து பேசியதாக செய்திகள் வெளிவந்தது. அதுபற்றி ஐஸ்வர்யா தரப்பில் இருந்து விளக்க அறிக்கை ஒன்று வெளியாகியது. அதாவது, தான் பேசியதை தவறாகப் புரிந்துகொண்டு செய்தியாக வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்திவிட்டனர் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து அறிந்துகொண்டு ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஆறுதல் தரும் விதத்தில் டுவிட் செய்துள்ளார் ராஷ்மிகா.

அதில் “ஹாய் அன்பே. தற்போது தான் இதுபற்றி பார்த்தேன். நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்பதை நான் நன்றாகப் புரிந்துகொண்டேன். இது தொடர்பாக நமக்குள் எந்த விளக்கமும் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன். உங்கள் மீது எனக்கு அன்பும் மரியாதையும் உள்ளது என்பது உங்களுக்கு தெரியும். உங்களின் பர்ஹானா திரைப்படத்திற்கு என் அன்பான வாழ்த்துகள்” என ராஷ்மிகா குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை ரீ டுவிட் செய்து ஹாட்டின் எமோஜிகளை பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா.