கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் சேர்ந்தவர் நவ்ஷித். இவருக்கு சமூக வலைதளம் மூலமாக கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு ரேஷ்மா என்பவர் இவருக்கு அறிமுகம் ஆகி உள்ளார். சமூக வலைதளத்தில் தொடங்கிய இவர்களுடைய நட்பு பின் போன் வழியாகவும் நேரு சந்திக்கும் வழக்கமாகவும் வளர்ந்துள்ளது. இதனையடுத்து ரேஷ்மாவும் நவசித்தும் தனியாக அவர்களுடைய நண்பர்களுடனும் சேர்ந்து பேசி வந்துள்ளார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் ரேஷ்மாவை நேரில் சந்திக்க வந்துள்ளார் நவ்ஷித். அப்போது நவ்ஷித்தை நம்பி ஹோட்டலுக்கு வந்திருக்கிறார் ரேஷ்மா.
இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது . இதனால் ஆத்திரமடைந்த நவசித் கத்தியை எடுத்து அந்த பெண்ணை குத்த ரத்த வெள்ளத்தில் சரிந்த ரேஷ்மா சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றியதோடு, நவ்ஷித்தை கைது செய்து விசாரித்துள்ளனர். அப்பொழுது நண்பர்கள் மத்தியில் ரேஷ்மா பாலுணர்வு குறித்து கேலி செய்து பேசியது தனக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. என்றும் இதனாலே அவரை குத்தி கொலை செய்தேன் எனவும் கூறியுள்ளார்