நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து முதலீடு செய்ய நினைத்தால் அதை PPF திட்டத்தில் முதலீடு செய்வதுதான் சிறந்த சாய்ஸ் ஆக இருக்கும். இந்தியாவில் அதிக வட்டி வருமான வழங்கும் திட்டங்களில் PPF ம் ஒன்று. முதலில் இதனுடைய சிறப்பம்சம் என்னவென்றால் அதிகமான வட்டி. இரண்டாவது சிறப்பம்சம் என்னவென்றால் 100% பாதுகாப்பான முதலீடு. 15 -20 வருடங்கள் வரை நீண்ட காலம் இப்படி ஒவ்வொரு மாதமும் சிறுக சிறுக முதலீடு செய்தால் மெச்சூரிட்டி காலத்தில் அதிக லாபம் கிடைக்கும்.

இந்நிலையில் PF தாரர்களுக்கு வட்டித் தொகை இன்னும் வரவு வைக்கப்படவில்லை. இதுகுறித்து ட்விட்டரில் பயனரின் கேள்விக்கு பதிலளித்த பிஎஃப் நிறுவனம், ”வட்டியை செலுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அது உங்களது கணக்கை வந்து சேரும். தாமதமானாலும் அத்தனை நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாகவே வட்டி செலுத்தப்படும். உங்கள் வட்டிப் பணம் குறையாது. அமைதி காத்திருங்கள்” என்று ட்வீட் செய்திருக்கிறது