சேலம் மாவட்டத்தில் உள்ள வேங்கம்பட்டியில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார் இவரது மகன் சந்தோஷ்(23) நண்பர்கள் 9 பேருடன் புத்தாண்டை கொண்டாடுவதற்காக ஏற்காடு சென்றுள்ளார். இதனையடுத்து ஏற்காட்டை சுற்றி பார்த்துவிட்டு ஒண்டிக்கடை பகுதியில் இருக்கும் தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து நள்ளிரவில் மது அருந்தியும், கேக் வெட்டியும் புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். அப்போது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் சந்தோஷை அவரது நண்பர்கள் ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் சந்தோஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் நடத்திய விசாரணையில் முதல்முறையாக அன்று தான் சந்தோஷ் மது அருந்தியது தெரியவந்தது. இதனையடுத்து பிரேத பரிசோதனை அறிக்கையில் மூச்சு குழலில் உணவு அடைந்த காரணத்தினால் மூச்சு விட முடியாமல் சந்தோஷ் இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. உயிரிழந்த சந்தோஷத்திற்கு மனைவியும், மூன்று வயதில் குழந்தையும் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.