தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நவீன் என்பவர் பயின்று வந்துள்ளார். அவரின் நண்பர் ஹரிஹர கிருஷ்ணா ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்தப் பெண் நவீனியின் காதலை ஏற்றுக் கொண்ட நிலையில் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். திடீரென கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவியரிடம் ஹரிஹர கிருஷ்ணா காதலை வெளிப்படுத்திய நிலையில் இருவரும் காதலித்து வந்தனர். இதனால் நண்பர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

தினம்தோறும் நவீன் மெசேஜ் அனுப்பி அந்த பெண்ணை தொல்லை செய்து வந்த நிலையில் அந்த பெண் தனது காதலன் ஹரிஹர கிருஷ்ணாவிடம் இது குறித்து கூறியுள்ளார். என் நிலையில் நண்பன் நவீனை கொலை செய்ய திட்டமிட்ட ஹரிஹர கிருஷ்ணா மூன்று மாதங்கள் காத்திருந்து நவீனை தனது வீட்டிற்கு அழைத்து வந்தவுடன் கல்லூரி விடுதியில் விட்டு விடுவதாகவும் கூறியுள்ளார். ஆனால் செல்லும் வழியில் வாகனத்தை நிறுத்திவிட்டு இருவரும் மது அருந்திய நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. அப்போது ஹரிஹர கிருஷ்ணா நவீனை தான் வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் அவரை துண்டு துண்டாக வெட்டி இதயத்தை எடுத்துள்ளார். அதனை புகைப்படமாக எடுத்து தன்னுடைய காதலிக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்ட அவர் பல நாட்கள் கழித்து போலீஸிடம் சரண் அடைந்தார். காதலிக்காக தனது நண்பனை கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.