பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில், காதலனுடன் உடலுறவில் ஈடுபட்ட பிறகு, ஒரு சிறுமி இறந்ததற்கான அதிர்ச்சிகரமான சம்பவம் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் ஜக்கன்பூர் காவல் நிலைய எல்லையில் நடந்துள்ளது. சம்பவத்தை அடுத்து, போலீசார் சிறுமியின் காதலன், அவரது நண்பர் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

காவல்துறையினர் தெரிவித்ததாவது, அந்த சிறுமி 10 நாட்களுக்கு முன்பு மசௌரி பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவனை சந்தித்ததாக கூறப்படுகிறது. பின்னர், அந்த சிறுவன் தனது நண்பனான மற்றொரு சிறுவனின் அறைக்கு சிறுமியை அழைத்துச் சென்றார். அங்கு இருவரும் உடலுறவில் ஈடுபட்டனர்.

அந்த நேரத்தில், சிறுமிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டது, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் சனிக்கிழமை போலீசாருக்கு தெரியவந்ததும், உடனடியாக இருவரையும் காவலில் எடுத்தனர்.

சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது என்றும், வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மறுபுறம், சிறுமியின் தாத்தா கூறியதாவது, “என் பேத்தி ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிக்குச் சென்றாள்.

பின்னர், பள்ளியை விட்டு விட்டாள். அவளது தந்தை ஒரு தச்சு வேலை செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு, ‘ஜெகனாபாத் சென்று வருகிறேன்’ என கூறி வீட்டை விட்டு சென்றாள். ஆனால், அவள் எப்படி பாட்னாவை அடைந்தாள் என்பதையும், இவ்வளவு பெரிய சம்பவம்  நடந்தது பற்றியும் எங்களுக்கு எதுவும் தெரியவில்லை.

தகவல் கிடைத்த பிறகு பாட்னாவை சென்றபோதுதான், என் பேத்தி இறந்துவிட்டதை தெரிந்துகொண்டேன்” என்று கூறினார். ஜக்கன்பூர் காவல் நிலைய பொறுப்பதிகாரி மணீஷ் குமார் கூறுகையில், “அவர்களின் வாக்குமூலம் பெறப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டு, இரு சிறுவர்களும் காவலில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.