இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி‌ ஷா செல்ஃபி விவகாரத்தில் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஷப்னாகில் என்ற நடிகையும் இருக்கிறார். நடிகை ஷப்னா கில் காசி அமர்நாத், ரவி கிஷன் போன்ற படங்களில் நடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக கிரிக்கெட் வீரர் பிரித்வி‌ ஷா தன்னுடைய நண்பர்களுடன் ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு உணவு அருந்துவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு குழுவாக வந்த சிலர் கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவுடன் செல்பி எடுக்க வேண்டும் என கேட்டுள்ளனர். ஆனால் பிரித்வி ஷா 2 பேரும் மட்டுமே செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். அதன்படி‌ 2 பேர் செல்ஃபி எடுத்துக் கொண்ட நிலையில் குழுவாக செல்பி எடுக்க வேண்டும் என பிரித்வி ஷாவிடம் கூறியுள்ளனர்.

இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததோடு தன்னுடைய நண்பர்களுடன் வந்திருக்கிறேன் தொந்தரவு செய்ய வேண்டாம் எனக் கூறி ஹோட்டல் ஊழியர்களிடம் சொல்லி அவர்களை  வெளியே அனுப்பி வைத்துள்ளார். இதனால் வெளியே சென்ற அந்த குழு பிரித்விஷாவிடம் தகராறில் ஈடுபட்டதோடு அவரை தாக்கவும் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியாகிய பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் பிரித்விஷா சார்பில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஷப்னாகில் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஷப்னாகில் தரப்பில் கிரிக்கெட் வீரர் பிரித்விஷா குடித்திருந்ததாகவும், அவர்தான் தன்னை முதலில் பேட்டால் தாக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகவும்.