பெங்களூருவின் ஹெக்டே நகர் அருகே, ஓடும் பேருந்தில் பி.எம்.டி.சி. (BMTC) ஓட்டுநரை ஒரு கேப் (Cab) ஓட்டுநர் தாக்கியச் சம்பவம், சாலைப் பாதுகாப்பின் அபாயகரமான நிலையை வெளிப்படுத்தியுள்ளது.
சிவாஜி நகரில் இருந்து யெலஹங்காவுக்குச் சென்று கொண்டிருந்த பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது, லேசாக உரசிக் கொண்டதால் ஆத்திரமடைந்த நரசிம்மையா என்ற கேப் ஓட்டுநர், பேருந்தைத் துரத்திச் சென்று வழிமறித்துத் தாக்கியுள்ளார்.
இந்தத் தாக்குதல் பேருந்து ஓடிக்கொண்டிருக்கும்போதே நடந்ததால், பயணிகள் மத்தியில் பெரும் பீதி கிளம்பியது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, கடும் நடவடிக்கை எடுக்கக் கோரிப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
Bengaluru Road Rage Goes Next Level: BMTC Driver & Cabby Fight While Bus Is Moving Who Protects Passengers?
A verbal and physical clash broke out between a BMTC bus driver and a cab driver in Bengaluru, turning an ordinary commute into a dangerous display of road rage. In the… pic.twitter.com/SDeiz4IE10
— Karnataka Portfolio (@karnatakaportf) December 10, 2025
வீடியோவில், கேப் ஓட்டுநர் பேருந்துக்குள் வந்து ஓட்டுநர் நாகேஷைத் திட்டியதுடன், அவரது கையை ஸ்டீயரிங் சக்கரத்திலிருந்து பிடித்து இழுக்கும் அபாயகரமானக் காட்சி பதிவாகியுள்ளது.
இந்தச் செயல்களால் எந்த நேரத்திலும் விபத்து ஏற்படக் கூடும் என்ற நிலை உருவானது. நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, பி.எம்.டி.சி. ஓட்டுநர் பயணிகளின்ப் பாதுகாப்பிற்காகப் பேருந்தைச் சம்பிகேஹள்ளி காவல் நிலையத்திற்கே (Sampigehalli police station) ஓட்டிச் சென்றார்.
போலீஸார் இருதரப்பையும் சமாதானப்படுத்தினர். எனினும், பி.எம்.டி.சி. ஓட்டுநர் புகார் அளிக்காததால், போலீஸாரால் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய முடியவில்லை. பெங்களூருவில் அதிகரித்து வரும் இந்தச் சாலை ஆக்கிரமிப்பு (Road Rage) கலாசாரம், பயணிகளின் பாதுகாப்பு குறித்துக் கவலையை எழுப்பியுள்ளது.
