நடிகை விஜயலட்சுமி மீது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறு வழக்கு தொடர்ந்த நிலையில் வருகின்ற 29ஆம் தேதி விஜயலட்சுமி ஆஜராக வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின்  அடிப்படையில் கடந்த 2011 ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சீமான் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக சீமான் மீது விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் சீமான் மீது சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அளித்திருந்த புகாரை வாபஸ் பெறுவதாக விஜயலட்சுமி அறிவித்துவிட்டு பெங்களூரு சென்றார். இதனைத் தொடர்ந்து தற்போது சென்னை உயர்நீதிமன்றம் செப்டம்பர் 29ஆம் தேதி விஜயலட்சுமி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.