புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதை புரட்சி பாரதம் கட்சி வரவேற்கிறது. சமீப காலமாக திராவிட தலைவர்களையும்,  அதிமுக மாநாட்டையும் விமர்சித்து வந்த பாஜகவை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியுள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி இயங்கி வரும் நிலையில் அவர்கள் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.

அதிமுக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமையும் கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சியும் ஓர் அங்கம் வகிக்கும்  என்பதை கட்சியின் தலைவர் என்ற முறையில் தெரிவித்துக் கொள்கிறேன். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அமையும் கூட்டணியில் பங்கேற்று புரட்சி பாரத கட்சி தேர்தலை எதிர்கொள்ளும்.  என்.டி.ஏ – இந்தியா என்று எந்த ஒரு கூட்டணியிலும் பங்கேற்காமல் அதிமுக தலைமையில் நாங்கள் தனி கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.