திருச்சி மாவட்டத்தில் உள்ள இடையப்பட்டி பகுதியில் நாகராஜ் (45) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக தன்னுடைய காரை எடுத்துள்ளார். அப்போது திடீரென காரின் முன் பகுதி தீப்பிடித்து எரிந்தது. இதனால் பதறிப்போன நாகராஜ் உடனடியாக காரில் இருந்து இறங்கி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மண்ணை போட்டு தீயை அணைக்க முயற்சி செய்தார்.

ஆனால் கார் முழுவதும் தீ வேகமாக பரவியது. இதனால் உடனடியாக மணப்பாறை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். ஆனால் கார் முழுவதுமாக எரிந்து சேதமானது. இந்த கார் அதிக வெயிலின் காரணமாக தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக மணப்பாறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.