தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்குகளில் நிலவும் காற்றின் வேகதிசை மாறுபாடு காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று நீலகிரி, கோவை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு ஆகிய 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதன் பிறகு நாளை தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் மே 12ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.