பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் காவலர்களை தரக்குறைவாக பேசிய வழக்கில் கடந்த 3-ம் தேதி கோவை சைபர் கிரைம் காவல்துறையினரால் தேனியில் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அவரை கோவைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவருடன் தங்கியிருந்த ராஜரத்தினம் மற்றும் ராம்பிரபு ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்‌.

அப்போது அவர்கள் வந்த காரில் 2.6 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்ததால் அவர்கள் இருவரையும் கஞ்சா வழக்கில் காவல்துறையினர் கைது செய்து தேனி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மகேந்திரன் (24) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சவுக்கு சகருக்கு கஞ்சா சப்ளை செய்ததால் அவரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரிடமிருந்து 2.6 கிலோ கஞ்சாவையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.