நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணி தொடர் தோல்வியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்திய நிலையில், நேற்று ஹைதராபாத்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மும்பை அணி அசத்தலாக விளையாடி வெற்றி பெற்றது. இந்த ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா தொடர்ந்து சொதப்பி வருகிறார். நேற்று நடைபெற்ற போட்டியில் கூட ரோஹித் சர்மா வெறும் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் கடந்த 5 போட்டிகளில் 20 ரன்களை கூட எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார். அடுத்த மாதம் டி20 உலக கோப்பை போட்டி தொடங்க இருக்கும் நிலையில் ரோகித் சர்மாவின் பார்ம்-அவுட் இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

நடப்பு ஐபிஎல் தொடரில் முதலில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா அடுத்தடுத்து 5 போட்டிகளில் குறைவான ரன்களில் ஆட்டம் இழந்தார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் அவர் 6 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில் மிகவும் கவலை அடைந்துள்ளார். இதனால் அவர் அறையில் கண்கலங்கி அழுதார். மேலும் சோகம் நிறைந்த முகத்துடன் கண்களில் இருந்து வழியும் கண்ணீரை ரோகித் துடைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.