ஐசிசி டி20 உலக கோப்பை போட்டியில் விளையாடும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் இடம்பெறாததற்கு முன்னால் இந்திய வீரர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது நடராஜன் இந்திய அணியில் தன்னுடைய பெயர் இடம் பெறாதது குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது, தேர்வுக் குழுவில் என்னுடைய பெயரை இந்திய அணியில் தேர்வு செய்வது தொடர்பாக விவாதித்து இருக்கிறார்கள்.

பேச்சுவார்த்தையில் நானும் இடம் பெற்றுள்ளேன் என்பதை நினைக்கும்போதே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். நான் தேர்வு செய்யப்படுகிறேனா அல்லது இல்லையா என்பது என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை. இருப்பினும் அதற்கான ஒரு விவாதத்தில் நானும் ஒரு அங்கமாக இருக்கிறேன் என்பதே  எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஒரு கட்டிடத்தின் உயரத்திற்கு செல்ல வேண்டும் என்றால் ஒவ்வொரு படியாக தான் ஏற முடியும். மேலும் தற்போது என்னுடைய கவனம் எல்லாம் ஹைதராபாத் அணியின் வெற்றி மீதுதான் இருக்கிறது என்று கூறினார்.