சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளரான ரவீந்தர் 2 பேரும் திருப்பதியில் திருமணம் செய்து புகைப்படம் வெளியிட்டனர். இதையடுத்து அவர்கள் எந்த பதிவு போட்டாலும் சமூகவலைதளங்களில் மிகவும் டிரெண்ட் ஆனார்கள்.  சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவரும், தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகரன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அமெரிக்க வாழ் இந்தியரான விஜய் என்பவர் ஆன்லைன் வாயிலாக அளித்த மோசடி புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, ரவீந்தர் இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.