பாலிவுட் நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் மரணமடைந்ததாக வெளியான செய்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பூனம் பாண்டே மற்றும் அவரது மேலாளர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு அனைத்திந்திய சினிமா தொழிலாளர்கள் மும்பை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இந்த செய்தியால் பூனம் பாண்டேவுக்கு அஞ்சலி செலுத்தியவர்களின் உணர்வுகள் புண்பட்டுள்ளது என புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.