இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. போலி கணக்குகளை உருவாக்கி அதன் மூலம் மக்களை ஏமாற்றும் சம்பவங்கள் அதிகரிக்கிறது. அதன்படி தன்னுடைய பெயரை பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபடுவதாக நடிகை வித்யா பாலன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், எனது பெயரில் சிலர் சமூக வலைத்தளத்தில் போலி கணக்குகளை ஆரம்பித்து பண மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அந்த போலி கணக்குகளில் இருந்து யாருக்காவது குறுந்தகவல் வந்தால் அதனை புறக்கணிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.