நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் லாரா இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும் லாரா கடந்த சில நாட்களாக கடும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் முதல் கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வேறு ஏதும் காரணம் இருக்குமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.