தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு தளபதி 68 திரைப்படத்தை அட்லீயும், தளபதி 69 படத்தை வம்சியும் இயக்கலாம்‌ என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பானா காத்தாடி படத்தை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் தற்போது ஒரு ட்விட்டர் பதிவை போட்டுள்ளார்.

அதில் விஜயின் ஜில்லா படத்தை இயக்கிய அவருடைய நண்பர் நேசன் நடிகர் விஜய்க்காக சூப்பரான ஒரு கதையை தயார் செய்து வைத்துள்ளாராம். அந்தக் கதையில் மட்டும் விஜய் நடித்தால் வேற லெவலில் இருக்கும் என்று ட்வீட் பதிவு போட்டுள்ளார். மேலும் விஜயின் நடித்த ஜில்லா திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் கலவையான விமர்சனங்களே பெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.