இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத மாபெரும் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் இப்போது உருவாகி இருக்கும் படம் “ஜெயிலர்”. நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்திருக்கும் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, தமன்னா, கன்னட நடிகர் சிவராஜ் குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.

இந்நிலையில் ஜெயிலர்’ படத்தை முடித்த கையோடு ரஜினி, ‘ஜெய்பீம்’ பட இயக்குநர் ஞானவேல் ராஜா இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதையடுத்து, அவரின் 171வது படத்தை யார் இயக்க உள்ளார் என்ற தகவலை மிஷ்கின் சமீபத்தில் பேட்டி ஒன்றில் உடைத்தார். அதில், “ரஜினியே அழைத்து இயக்குநர் லோகேஷூக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். அவரின் 171வது படத்தை லோகேஷ்தான் எடுக்க உள்ளார். என்னை பொறுத்தவரை ரஜினியின் கடைசி படமாக இது இருக்கலாம்” என்றார்.