தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான மாரிமுத்து நேற்று மாரடைப்பால் காலமானார். இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரின் உடல் நேற்று சென்னையில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நடிகர் மாரிமுத்துவின் உடல் சொந்த ஊரான தேனி மசுமலை தேறி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அவரது உடலைக் கண்டு உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுகின்றனர். தன்னுடைய சொந்த ஊருக்கு மாரிமுத்து இதுவரை பல உதவிகளை செய்துள்ளார். அதை சொல்லி சொல்லி ஊர் மக்கள் நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறி அழும் காட்சி நெஞ்சை உலுக்குகின்றது. அவருக்கு அஞ்சலி செலுத்த ஊர் மக்கள் மட்டுமல்லாமல் பல ஊர்களில் இருந்தும் பொதுமக்கள் பலரும் வந்துள்ளனர்.