ஒரு நல்ல கலைஞனை இழந்து விட்டோம் என்று இயக்குனரும் நடிகருமான மாரிமுத்துவின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் நேற்று மாரடைப்பால் சிகிச்சை பலனின்றி மாரிமுத்து காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மட்டுமல்லாமல் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள கமல்ஹாசன், தனித்துவம் மிக்க நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இயக்குனரும் குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து அகால மரணம் அடைந்த செய்தி அறிந்து மிகுந்த துயரம் கொண்டேன். ஒரு நல்ல கலைஞனை இழந்து விட்டோம். எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.