சின்னத்திரையில் எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகர் தான் மாரிமுத்து. இவர் நேற்று மாரடைப்பால் காலமானார். டப்பிங் பணியின் போது மாரடைப்பால் உயிர் பிரிந்தது. இந்த நிலையில் மருத்துவர் ஆனந்தகுமார், நெஞ்சு வலி வந்ததும் அவரே கார் ஓட்டிக்கொண்டு வராமல் வேறு யாரேனும் உதவியுடன் முன்பே வந்திருந்தால் காப்பாற்றி இருக்க வாய்ப்பு உண்டு, நெஞ்சுவலி வந்தால் வேகமாக நடப்பது, ஓடுவது மற்றும் கார் ஓட்டுவது என எதையும் செய்யக்கூடாது, அவை இதயத்திற்கு மேலும் வலியை கொடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.