சின்னத்திரையில் ‘எதிர்நீச்சல்’ சீரியல் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலமடைந்த நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் நேற்று  காலமானார். டப்பிங் பணியின் போது மாரடைப்பால் உயிர் பிரிந்தது. இந்நிலையில், மறைந்த நடிகர் மாரிமுத்துவின் உடலுக்கு திரைப்பிரபலங்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். அதன்படி, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த சிறுமி கதறி அழுத காட்சி, மனதை ரணமாக்கியது.

இந்த சிறுமி அவர் நடிக்கும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்துள்ளார். இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், எனக்கு அழுகையா வருகிறது. எனது பெரியப்பா போய்ட்டாரு, ரொம்ப கஷ்டமா இருக்கு” என தெரிவித்தார்.