தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஆலியா மானசா. ராஜா ராணி சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தன்னுடன் நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.. தற்போது இனியா என்ற சீரியலில் ஆல்யா மானசா பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஆலியா மானசாவின் காலில் இருக்கும் பெரிய தழும்பை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக வெளியான புகைப்படத்தை பார்த்து தழும்பு எப்படி ஏற்பட்டது என்று கேள்வி எழுப்பி விடுகிறார்கள். நடிகை ஆலியா மானசா சீரியல் நடிகைகளுக்கு இடையே நடைபெற்ற கபடி போட்டியில் கலந்து கொண்ட போது இடது கால் எலும்பு முறிந்த நிலையில் அப்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இது நடந்து பல மாதங்கள் ஆகியுள்ள நிலையில் அவரின் காலில் இந்த பெரிய தழும்பு அப்படியே உள்ளதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் ஆலியா மானசா தற்போது நலமாக தான் உள்ளார்.