தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபாஸ். இவர் பாகுபலி என்ற திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் ஆதிபுருஷ், சலார் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் ஆதிபுருஷ் திரைப்படம் ராமாயண காப்பியத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் நிலையில், படத்தில் ராமராக பிரபாசும் சீதையாக கீர்த்தி சனோனும் நடிக்கிறார்கள். இந்த படபிடிப்பின் போது பிரபாஸ் மற்றும் கீர்த்தி ஆகியோருக்கு நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்ததாக கிசு கிசுக்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாலிவுட் சினிமாவின் விமர்சகர் ஒருவர் நடிகை கீர்த்தி சனோன் மற்றும் பிரபாஸுக்கு மாலத்தீவில் திருமண நிச்சயதார்த்தம் முடிவடைந்துள்ளதாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

 

இந்த பதிவு வைரலாகி வரும் நிலையில் பிரபாஸ் மற்றும் கீர்த்தி சனோன் ரகசியமான முறையில் திருமண நிச்சயதார்த்தத்தை முடித்து விட்டார்களா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் கீர்த்தி மற்றும் பிரபாஸ் தரப்பில் இருந்து நிச்சயதார்த்தம் செய்து கொள்ளவில்லை அவர்கள் காதலிக்கவும் இல்லை என பிரபாஸ் தரப்பில் இருந்து தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் பிரபாஸ் மற்றும் கீர்த்தி இருவரும் வெறும் நண்பர்கள் என்றும், சமூக வலைதளங்களில் வெறும் தகவல்கள் வெறும் போலியானது என்றும் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இதிலிருந்து நடிகர் பிரபாஸ் மற்றும் கீர்த்தி நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக வெளிவந்த தகவல்களில் உண்மையுள்ளது என்பது தெரியவந்துள்ளது.