தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, சிவராஜ்குமார் மற்றும் மோகன்லால் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். அதன் பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்.

இதைத்தொடர்ந்து நடிகர் ரஜினியின் அடுத்த படத்தை ஞானவேல் இயக்குவதாக கூறப்படுகிறது. இயக்குனர் ஞானவேல் நடிகர் சூர்யாவின் ஜெய் பீம் படத்தை இயக்கியிருந்தார். மேலும் ஞானவேல் இயக்கும் படத்தில் நடிகர் ரஜினி போலீசாக நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.