நடிகை திரிஷா குறித்து கீழ்த்தரமாக பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு பல தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் வந்த வண்ணம் உள்ளன. மோசமான மனிதர் என்று த்ரிஷாவிடம் இருந்து தொடங்கிய கண்டனம், சின்மயி, லோகேஷ் கனகராஜ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் என்று நீல்கிறது.

இந்த நிலையில் திரிஷாவை மன்சூர் அலிகான் தரக்குறைவாக பேசியதும் குஷ்பூ மற்றும் தமிழிசை சௌந்தர்ராஜன் என அனைவரும் வருகிறீர்களே, அதே தனக்கு சீமானால் பிரச்சனை வந்தபோது யாராவது வந்தீர்களா என நடிகை விஜயலட்சுமி ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டைப் பொறுத்த வரைக்கும் பெண்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் தைரியமாக வந்து குரல் கொடுக்கிறது பெரிய ஆர்டிஸ்ட்கள் மட்டும்தான் என்று கூறியுள்ளார்