நடிகை நயன்தாரா நடிப்பு மட்டுமல்லாமல் தற்பொழுது அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இவருடைய கம்பெனியில் தயாரிக்கப்படும் அழகு சாதன பொருட்கள் மலேசியா, சிங்கப்பூர் என பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் நயன்தாரா தன்னுடைய நெருங்கிய தோழியான நடிகை சமந்தாவிற்கு தன்னுடைய நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட பொருள்களை பரிசாக அனுப்பி வைத்துள்ளார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த பொருட்களை  பயன்படுத்துவதற்கு  ஆவலாக இருப்பதாக பதிவிட்டுள்ளார். சமந்தாவின் நிகழ்ச்சி பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.