அணியில் தோனி இருப்பதால் கேப்டன் பொறுப்பில் கூடுதலாக எந்த அழுத்தத்தையும் உணரவில்லை என சிஎஸ்கே அணியின் புதிய கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். பெங்களூர் அணிக்கு எதிரான முதல் போட்டி வெற்றிக்கு பிறகு பேசிய அவர், கேப்டன் பொறுப்பை நான் ரசித்து மகிழ்ந்தேன். நிலைமையை எவ்வாறு கையாள வேண்டும் என்பதில் ஏற்கனவே அனுபவம் உள்ளது. அனைத்து வீரர்களும் தங்களது பொறுப்பை உணர்ந்து ஆடினார்கள் என்று பேசினார்.