சென்னை அணியின் கேப்டன் தோனி காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த் அனுமதிக்கப்பட்ட அதே மருத்துவமனையில் தோனிக்கு சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாகவும்  கூறப்படுகிறது.

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி 5வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் எம்எஸ் தோனி தலைமையிலான சிஎஸ்கே அதிக கோப்பைகளை வென்ற மும்பையின் சாதனையை சமன் செய்துள்ளது. இதுவரை நடைபெற்ற 16 சீசன்களில் இரு அணிகளும் தலா 5 முறை கோப்பையை வென்றுள்ளன.

இந்த வெற்றியை தொடர்ந்து சென்னை அணியின் கேப்டன் தோனி முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 41 வயதான தோனி தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் முழங்கால் காயத்துடன் அனைத்து போட்டிகளிலும் விளையாடினார்.

ஐபிஎல் சீசனின் தொடக்கத்தில் இது குறித்து பேசிய தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், கேப்டன் தோனி முழங்கால் காயத்தால் அவதிப்படுவது உண்மைதான். அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலக வாய்ப்பில்லை என்று கூறியிருந்தார். அதுமட்டுமின்றி, சிஎஸ்கே வீரர்களை அதிகமாக ரன் ஓட வைக்க வேண்டாம் என்றும் தோனி வெளிப்படையாக கேட்டுக் கொண்டார்.

சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த கடைசி லீக் போட்டி முடிந்ததும், சென்னை வீரர்கள் மைதானத்தை சுற்றி வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பரிசுகளை வழங்கினர். கேப்டன் தோனியின் முழங்காலில் கட்டப்பட்டிருப்பது பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.எம்.எஸ். தோனி இந்த வாரம் மும்பையின் புகழ்பெற்ற கோகிலாபென் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார் என்றும், அவரது முழங்கால் காயத்தின் அளவை சரிபார்க்க பரிசோதனைகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட், கோகிலாபென் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். காயத்தின் நிலையைப் பொறுத்து தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா? மாட்டீர்களா? அது தெரியவரும். இதனை சென்னை அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் உறுதி செய்துள்ளார்.