இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இந்த காயத்துடன் இந்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் விளையாடி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றார்.

இந்நிலையில் தோனி முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு மும்பை கோகிலாபென் மருத்துவமனையில் சிகிச்சை பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் தோனிக்கு சிகிச்சை தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஐபிஎல் தொடக்கத்தில் பேசிய சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன், தோனி முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.