டெல்லி போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் (ASI) ராஜேஷ் குமார், திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் திடீரென மாரடைப்பால் சரிந்து இறந்தார். அக்டோபர் 6ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. காலை 9:22 மணிக்கு அவர் வேலைக்கு வந்து சக ஊழியர்களை வாழ்த்திய பிறகு, எஸ்கலேட்டரை நோக்கி சென்றபோது திடீரென கீழே விழுந்தார். அவரது சகாக்கள் உடனடியாக உதவிக்கு ஓடி வந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அங்கு மருத்துவர்கள் அவரை இறந்துவிட்டதாக அறிவித்தனர். மாரடைப்பு தான் மரணத்துக்கு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
एक और हंसते चलते फिरते मौत LIVE
दिल्ली के तीस हजारी कोर्ट में पुलिस इंस्पेक्टर राजेश कुमार की हार्टअटैक से मौत।
ऐसी मौत कितनी आम सी हो गई है। लेकिन किसी के लिए अभी भी कोई मुद्दा नहीं है। हाँ मेहंदी की दुकान हिंदू की है या मुसलमान की इसे जानने की इच्छा मीडिया/लोगों को ज़रूर है। pic.twitter.com/3A5A950W8c— Narendra Nath Mishra (@iamnarendranath) October 9, 2025
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக திடீர் மாரடைப்பால் இறப்புகள் அதிகரித்து வருகின்றன. பல்வேறு வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகின்றன. இதேபோல், ஜூலை மாதம் ஹரியானாவின் பரிதாபாத்தில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த பங்கஜ் ஷர்மா என்ற நபரும் மாரடைப்பால் சரிந்து இறந்தார். அவர் 170 கிலோ எடையுடன் இருந்தார், இந்த சம்பவமும் சிசிடிவியில் பதிவாகியது. இத்தகைய சம்பவங்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
