தமிழகத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பெரும் பல நோக்கு கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்குவதற்கு அரசு ஏற்கனவே உத்தரவிட்ட நிலையில் தற்போது கருணை ஓய்வூதியமாக ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை சேர்ந்த ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு எந்தவித பாகுபாடும் இல்லாமல் ஆயிரம் ரூபாய் கருணைத்தொகை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி முதல் ஜூலை மாதம் வரையிலான ஆறு மாதங்களுக்கு கருணை ஓய்வூதியமாக 6000 ரூபாய் அவரவர் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.