தேவர் தங்க கவசம் தொடர்பான வழக்கில், தேவர் தங்க கவச பெட்டகத்தை தேவர் நினைவாலய பொறுப்பாளர்கள், அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் இணைந்து வங்கியில் எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று தான் உள்ளார், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது என ஓபிஎஸ் தரப்பு வாதம் வைத்தனர்.

தற்போது அதிமுக பொது செயலாளராக EPS மற்றும் பொருளாளராக திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் உள்ளனர். வங்கியில் இருக்கும் கவசத்தை அதிமுக பொருளாளர் மற்றும் தேவர் நினைவாலயம் நிர்வாகிகள் இணைத்து தான் எடுக்க முடியும் என அதிமுக தரப்பு தெரிவித்துள்ளது.