தமிழ் திரை உலகில் புகழ்பெற்ற நடிகராக வளம் வருபவர் நடிகர் நாசர். இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்ட இவர்,  தமிழ்  தெலுங்கு  மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.  நடிகராக மட்டுமல்லாமல் நடிகர் சங்க தலைவராகவும் உள்ளார். இந்த நிலையில் நடிகர் நாசரின் தந்தை உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் தட்டான்மலை தெருவில் நாசரின் தந்தை மாபுப் பாட்ஷா இருந்து வந்தார். 95 வயதான மாப்பு பாஷா உடல் நலக்குறைவால் உயிரிந்துள்ளார். சில மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இவருக்கு உதவியாக  நாசரின் தம்பி ஜவகர் உதவியாக இருந்து வந்திருந்தார்.  தற்சமயம் இந்த பகுதிக்கு நடிகர் நாசர் வருகை  தந்தையின் உடலை காண வருகை தந்திருக்கிறார்.  அவர் மட்டுமல்லாது அவரது குடும்பத்தாரும் இந்த பகுதிக்கு வந்து இருக்கின்றனர் தொடர்ச்சியாக பொதுமக்கள் பொதுமக்களின் அஞ்சலிக்காக  உடலானது வைக்கப்ட்டுள்ளது.