பெங்களூரை சேர்ந்த கணேஷ் பிரபு என்பவரது மகன் ஆதித்யா பிரபு. 19 வயதான இவர் பி டெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று முதல் பருவத்தேர்வு எழுதிக் கொண்டிருந்த ஆதித்யா பிரபு, தேர்வறையில் மொபைல் பயன்படுத்தியதாக கூறப்பட்டு அவரை வெளியில் அனுப்பி உள்ளனர்.

மேலும் இது பற்றி அவரது பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதை அறிந்த ஆதித்யா பிரபு மன வேதனை அடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து கல்லூரி தான் தனது மகனின் தற்கொலை முடிவுக்கு காரணம் என்று ஆதித்யாவின் தந்தை கணேஷ் பிரபு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.