மக்களவைத் தேர்தலைப் பற்றி கவலைப்படாமல், சசிகலா ஆன்மிகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறாராம். தேர்தல் வந்தால் பாஜக மேலிடம் தொடங்கி TTV தினகரன் வரை அனைவரும் தன்னைத் தேடிவருவார்கள் என்று எதிர்பார்த்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏற்கெனவே அரசியல் ரீதியாக புறக்கணிப்புக்கு ஆளான அவர், தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு பாதகமாக வரும்பட்சத்தில், தனது அடுத்த இன்னிங்சை தொடங்கும் எண்ணத்தில் இருக்கிறாராம்.