பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தை கைவிடக் கோரி ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் பலவகையான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், அடிப்படை ஐனநாயக உரிமைகளை பறிக்கும் வகையில் சர்வாதிகாரமாக செயல்படும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தை கைவிடக் கோரியும், வரும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்காமல், தேர்தலை முழுமையாக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.