மக்களவை தேர்தலில் தென்காசி தொகுதியில், தாமரைக்கும் உதயசூரியனுக்கும் இடையே மட்டும் தான் போட்டி நிலவுவதாக தமமுக தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “யார் என்னைப் பற்றி என்ன கூறினாலும், அவர்களுக்கு பதில் சொல்ல மாட்டேன்.

பிரதமர் மோடியின் சாதனைகளை கூறி பிரசாரம் செய்வேன். எனக்கு பிடித்த சின்னம் தாமரை. இந்திய பிரதமர் சின்னம் தாமரை. அதனால் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறேன்” எனத் தெரிவித்தார்