தென்னிந்தியாவில் மட்டுமல்ல வட மாநிலம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் பாஜகவின் தோல்வி நூறு சதவீதம் உறுதியாகிவிட்டது என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வளசரவாக்கத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திமுக பொருளாளர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளர் டி ஆர் பாலு மற்றும் அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து நிர்வாகிகளிடம் விளக்கினர்.