தேமுதிக கூட்டணி குறித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக சார்பாக போட்டியிட விரும்புபவர்கள் இன்று முதல் விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் 40 தொகுதிகளுக்கும் தேமுதிக விருப்ப மனு வாங்குவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தேமுதிக கேட்கும் தொகுதிகளை அதிமுக மற்றும் பாஜக கொடுக்க முன் வராததால் தொடர்ந்து கூட்டணி உறுதியாவதில் இழுப்பறி நீடிக்கிறது.