அதிமுக பெயர், கொடி மற்றும் சின்னம் லெட்டர் பேடை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிச்சாமி சார்பாக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, இதற்கு முன்பாவது இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிமுகவிற்கு துரோகம் செய்தவர்கள் இனி அந்த வேட்டியை கூட கட்ட முடியாது என்று கூறியுள்ளார்.