முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் செப்டம்பர் 5ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்த நாளில் கற்றல் மற்றும் கற்பித்தல் பணியில் சிறந்து விளங்கும் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்கு நல்ல ஆசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த விருதுக்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஜூலை 30ஆம் தேதியுடன் நிறைவு பெற்ற நிலையில் தற்போது இதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி பேராசிரியர்கள், பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் மற்றும் ஐடியை பயிற்றுநர்கள் ஆகியோர் இணையதளங்கள் மூலமாக விரைவாக விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.