வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக செயலி இன்று முதல் பயன்பாட்டிற்கு வருகிறது. தமிழக காவல்துறையின் வலைப்பின்னலில் உருவாக்கப்பட்டுள்ள இச்செயலியில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் புகார்களை பதிவு செய்யலாம். மனுக்கள் தகுந்த சரிபார்ப்புக்கு பின் சம்மந்தப்பட்ட மாநகர, மாவட்ட காவல்துறைக்கு விசாரணைக்கு அனுப்பப்படும். இதனை https://eservices tnpolice.gov.in/ல் பதிவிறக்கம் செய்யலாம்.

வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் தங்கள் புகார்களை தடையின்றி பதிவு செய்வதற்கு ஏதுவாக இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் செயலியில் புகார்களை பதிவு செய்தவுடன் தனி முகவரி என் உருவாக்கப்படும்