தேசியவாத காங்கிரஸ் சரத் பவாருக்கு சொந்தமில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சி அஜித் பவாருக்கு சொந்தமானது என தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கி உள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னமான கடிகாரத்தை அஜித் பவாருக்கு வழங்கியது தேர்தல் ஆணையம். பெருவாரியான உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால் தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் வசம் சென்றது.

மேலும் சரத் பவார் தனது கட்சிக்கு விருப்பமான பெயரை சூட்டிக்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. மாநிலங்களவை தேர்தலை கருத்தில் கொண்டு புதிய அரசியல் அமைப்பிற்கு பெயரிட சரத் பவாருக்கு ஆணையம் சலுகை வழங்கியுள்ளது. அஜித் பவார் வசம் 41 எம்எல்ஏக்களும், சரத் பவார் வசம் 12 எம்எல்ஏக்களும் உள்ளனர்.